Monday 24 April 2017

மே மாதக் கூட்டம் (2017)


எண்பதாம் ஆண்டுத் தொடக்க மாதக் கூட்டம்

கம்பன் புகழ்பாடிக் கன்னித்தமிழ் வளர்க்கும் காரைக்குடி கம்பன் கழகத்தின் முத்துவிழாப் புத்தாண்டில
முதற் சிறப்புக் கூட்டம் 6-5-2017 ஆம் நாள் சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு
கம்பன் அடிப்பொடி சா. கணேசன் முன்னாளில் கம்பன் புகழ்பாடிக் களித்த காரைக்குடி சிவன் கோயில் தெற்குவீதியில் அமைந்துள்ள
மீனாட்சி பெண்கள் மேல்நி்லைப்பள்ளி வளாகத்தில் நடைபெறுகிறது.
அவ்வயம் ஆழ்வார் ஆய்வுமையத்தினை நிறுவி ஆழ்வார்கள் அருள் அமுதத்தையும் கம்ப நாட்டாழ்வார் கவின் கவிக் கனிச்சாறையும் பல்லோரும் பல்லாண்டுகளாகப் பருகப் பெருங்கொடையளித்து வைணவப் பாற்கடலை வாய் மணக்க உண்டு செவி மணக்கச் சிந்தி மகிழும் செந்தமிழ்ப் பேரறிஞர்களுக்கு விருதுகளும் வழங்கிப் புரவலராக விளங்கவதோடு இப்போது எம்பெருமானார் எதிகட்கு இறைவனாம் எதிராசர் மதத்தில் புரட்சி செய்த மகான் இராமானுசர் ஆயிரமாம் திருநட்சத்திரத்திரப் பெருவிழாக்கண்டு நாமெல்லாம் மொண்டு உண்டு மகிழ நூற்றுப் பதினான்கு நூல்கள் எழுதி உடையவர் புகழ்பாடி உன்னதத் தமிழை உள்ளன்பால் வழுத்தி வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கச் செய்து போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகச் செய்தருளும் வள்ளல்
டாக்டர் எஸ். ஜகத்ரட்சகன் அவர்களின்
நற்றமிழ்த் தொண்டிற்கு நன்றி பாராட்டி
ஆழ்வார் அனுஜர்
எனும் விருதுப் புகழாரம் சூட்டி மகிழ்கிறோம்.
டாக்டர் சுதா சேஷய்யன் அவர்கள் தலைமையேற்று பாரட்டுரையும், ஆழ்வார் இராமானுஜர் அமுது உரையும் அருளிச்சிறப்பிக்கிறார்கள். அன்பர்கள் யாவரும் கலந்து கொண்டுக் கன்னித்தமிழ்ப் பருகிட வருக. வருக.
----------------------------------------------------------------------------
நிகழ்ச்சி நிரல் (மாலை 5.30 மணி முதல்)
இறைவணக்கம்
செல்வி கிரேசி
வரவேற்பரை-
திரு கம்பன் அடிசூடி பழ. பழனியப்பன்
தலைமை உரையும் பாரட்டுரையும்
ஆழ்வார் இராமானசர் புகழ் அருளுரையாய்
டாக்டர் சுதா சேஷையன்
ஆழ்வார் அனுஜர் விருது வழங்கல்
திரு. அரு. வே. மாணிக்கவேலு
விருதுரை ஆக்கமும் வாசித்தலும்
கவிஞர் கிருங்கை சேதுபதி
கம்பன் கழக முத்துவிழாத் தொடக்க வாழ்த்துரை
1947 ஆம் ஆண்டு ஒன்பதாம் ஆண்டுக் கமபன் விழாவில் திரு.விக. தலைமையில் பங்கேற்று வாழ்க உலகம் என வாழ்த்திய மூதறிஞர் கவிஞர்
ரெ. முத்துக்கணேசனார்
ஏற்புரையும் அமுத உரையும்
ஆழ்வார் அனுஜர் டாக்டர் எஸ். ஜகத்ரட்சகன்
நன்றியுரை
பேரா. மு.பழனியப்பன்.
விருந்தோம்பல்
நிகழ்ச்சி உதவி
நமது செட்டிநாடு மாத இதழ்
அருவே. மாணிக்கவேலு சரசுவதி அறக்கட்டளை
தம் தாயார் காரைக்குடி மெ.செ. அ.பழ. செட்டிச்சி ஆச்சி என்ற உண்ணாமலை ஆச்சி நினைவாக அவர்தம் புதல்வர் திரு. ப. அ. பழனியப்பன் (சோலை) உண்ணாமலை தம்பதியர்

Tuesday 21 February 2017

காரைக்குடி கம்பன் கழத்தின் மார்ச் மாதக் கூட்ட அழைப்பிதழ் (4.3.2017)

கம்பன் கழகம்
காரைக்குடி
புரவலர் திரு. எம்.ஏ. எம். ஆர் முத்தையா (எ) அய்யப்பன்
மார்ச் 2017 மாதக் கூட்ட அழைப்பிதழ் 
புதுமையான இரு நிகழ்ச்சிகள்
அன்புடையீர்
வணக்கம்.
கம்பன் புகழ்பாடிக் கன்னித்தமிழ் வளர்க்கும் காரைக்குடி தாய் கம்பன் கழகத்தின் 2017 மார்ச் மாதத்திருவிழா 4-3-2017 ஆம் தேதி சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு கல்லுக்கட்டி மேற்கு, கிருஷ்ணா திருமண மண்டபத்தில் நடைபெறுகின்றது.
இறைவணக்கம் திருமதி ஏ. சரண்யா
வரவேற்புரை பேராசிரியர் மு.பழனியப்பன்
அம்பத்தூர் கம்பன் கழக பட்டி மண்டபக் குழு
(நிறுவனர் திரு. எம்.எஸ்பி அருணாசலம்
தலைவர் திரு. பள்ளத்தூர் பழ. பழனியப்பன்
செயலாளர் திரு. வி.சுப்பிரமணியன் வழங்கும்
பட்டிமண்டபம்
நடுவர்
புலவர் உ. தேவதாசு
தலைப்பு இராமனின் வெற்றிக்குப் பெரிதும் உதவியவர்கள் அனுமனா! வீடணனா!
அனுமனே!
திரு. சே. பழ. விசுவநாதன் அம்பத்தூர்
திரு. தங்க ஆரோக்கிய நாதன், ஆவடி
திரு.க. சங்கர் ஆவடி
வீடணனே!
திரு கிளக்காடி வே. முனுசாமி ஆவடி
திரு. இரா. இராஜகோபால் அம்பத்தூர்
திரு. ஓ. லால்சுரேஷ் பாபு, முகப்பேர்
கம்பராமாயண தொடரடைவு படக்காட்சி விளக்கம்
நன்றியுரை மா.சிதம்பரம்
விருந்தோம்பல்
கம்பன் புகழ் பாடிக் கன்னித்தமிழ் வளர்க்க அன்பர்கள் யாவரும் வருக.
அன்பும் பணிவுமுள்ள
கம்பன் கழகத்தார் காரைக்குடி
நன்றி
கம்பன் தமிழமுதம் பருக வருக வரவேற்கும் பொன்னமராவதி அன்னை மெடிக்கல்ஸ், அரு,வெ. மாணிக்கவேலு –சரசுவதி அறக்கட்டளை
நமது செட்டிநாடு இதழ்
நிகழ்ச்சி உதவி
அழகப்பா அரசு கலைக்கல்லூரி மேனாள் வரலாற்றுத் துறைப் பேராசிரியர் பா. தட்சிணா மூர்த்தி
காரைக்குடி மனி பேதியியல் நிறுவன அறிவியலாளர் முனைவர் முனியாண்டி
-----------------------------------------------------------------------------
79 ஆம் ஆண்டு கம்பன் திருவிழா 2017
ஏப்ரல் 7,8,9,10
கிருஷ்ணா திருமண மண்டபம், கல்லுக்கட்டி மேற்கு, தினமும் மாலை 5.30 மணி
7.4.2017
திருநாள் மங்கலப் பேரவை, கம்பன் அடிப்பொடி விருது வழங்கல்
8.4.2017
தனிப்பேருரை
கவியரங்கம்
9.4.2017
பட்டிமண்டபம்
10.4.2017
நாட்டரசன் கோட்டை கம்பன் சமாதி அருட்கோயிலில் வழிபாடும் பேரவையும்
---------------------------------------------------------------------------------
நான்காவது உலகத் தமிழ்க் கருத்தரங்ம்
செட்டிநாடும் செந்தமிழும்
9-4-2017 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி முதல் பிற்பகல் 4.30 மணி வரை
எல்லோரும் வருக
பங்கேற்க விரும்பும் அறிஞர்கள் விதிமுறைகள், பதிவுக்கட்டணம், பதிவுப் படிவம் முதலியனவற்றை கம்பன் கழக இணைய வலைப்பூவிலும் முகநூல் தளங்களிலும் காணலாம்.
மேலதிக விபரங்களுக்குக் கண்டு, கேட்டுக் களிக்க விரும்பும் சுவைஞர்கள் பங்கேற்பதற்கும் முன்பதிவிற்கும் 9442913985 என்ற எண்ணில் முனைவர் மு.பழனியப்பன், 9486326526 என்ற எண்ணில் முனைவர் மா.சிதம்பரம் ஆகியோரிடம் தொடர்பு கொள்ளலாம்.

Saturday 21 January 2017

Kavi Sakkaravarthi'Kambar' Kovil (Samathi) Nattarasankottai.

கம்பன் விழா- மதுரை

ஆரோவில் தமிழ் மரபு மையம் - கம்பன் விழா

Paamaran Paarvaiyil Kambar Introduction

How the Andaman Book selected?

Paamaran Paarvaiyil Kambar Introduction

காரைக்குடி கம்பன் கழகம் (2017) பிப்பரவரி மாதத்திருவிழா, ஆய்வுச் சொற்பபொழிவு

கம்பன் கழகம், காரைக்குடி
புரவலர் –திரு எம்.ஏ. எம் ஆர் முத்தையா என்ற ஐயப்பன்

அன்புடையீர்
            வணக்கம்
        கம்பன் புகழ்பாடிக் கன்னித்தமிழ் வளர்க்கும் காரைக்குடி தாய்க் கம்பன் கழகத்தின் 2017 பெப்ருவரி மாதத்திருவிழா 4-2-17 ஆம் தேதி சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு கல்லுக்கட்டி மேற்கு, கிருஷ்ணா கல்யாண மண்டபத்தில் நடைபெறுகின்றது. திரு பழ. பழனியப்பன் தம் பெற்றோர் நூற்றாண்டு நினைவாக நிறுவியுள்ள மீனாட்சி பழனியப்பா அறக்கட்டளையின் பத்தாம் ஆண்டு ஆய்வுச் சொற்பொழிவினை திரு கம்பன் அடிசூடி ‘கைகேயி படைத்த கம்பன்’’ என்ற தலைப்பில் நிகழ்த்துகிறார்கள்.

     அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினரும், காரைக்குடி கம்பன் அறநிலைத் தலைவரும் ஆன திரு. சக்தி. திருநாவுக்கரசு அவர்கள் தலைமை ஏற்றுத் தொடங்கிவைத்துச் சிறப்பிக்க இசைந்துள்ளார்கள்
நிகழ் நிரல்

மாலை 5.30 மணி முதல் 6.00 மணி வரை தேநீர்

6.00 மணி்-  இறைவணக்கம்

6.05. மணி வரவேற்புரை.பேரா. மு.பழனியப்பன்

6.15 மணி தலைமையுரை திரு. சக்தி அ. திருநாவுக்கரசு 

6.30 மணி ஆய்வுரை 
                   கைகேயி படைத்த கம்பன் -  திரு கம்பன் அடிசூடி

7.30 மணி  சுவைஞர்கள் கலந்துரையாடல்

7.45 மணி  நன்றி  பேராசிரியர் மா. சிதம்பரம்

7.55 விருந்தோம்பல்

கம்பன் புகழ் பாடிக் கன்னித்தமிழ் வளர்க்க அன்பர்கள் யாவரும் வருக

                                                அன்பும் பணிவுமுள்ள
                                                கம்பன் கழகத்தார்

நன்றிகள்
கம்பன் தமிழமுதம் பருக வருகவென வரவேற்கும்

பொன்னமராவதி அன்னை மெடிக்கல்ஸ் 
அரு,வே. மாணிக்கவேலு –சரஸ்வதி அறக்கட்டளை

நமது செட்டிநாடு இதழ்





நிகழ்ச்சி உதவி மீனாட்சி பழனியப்பா அறக்கட்டளை காரைக்குடி







Monday 16 January 2017

காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் ‘செட்டிநாடும் செந்தமிழும்’ என்ற தலைப்பிலான பன்னாட்டுக் கருத்தரங்கம் (2017)



          
 காரைக்குடி கம்பன் கழகம்
நடத்தும்
‘செட்டிநாடும் செந்தமிழும்’
என்ற தலைப்பிலான பன்னாட்டுக் கருத்தரங்கம் (2017)
                      அறிவிப்புமடல்
கம்பனின் இராமாவதாரக் காப்பியத்தால் பெரிதும் ஈர்க்கப் பெற்று காரைக்குடியில் 1939 ஏப்பிரல் 2, 3 ஆகிய நாட்களில்  ரசிகமணி டி.கே.சிதம்பரநாதர் தலைமையில் கம்பன் புகழ்பாடிக் கன்னித்தமிழ் வளர்க்கும் தம் வாழ்நாள் வேள்வியைத் தொடங்கினார் சா.கணேசன் எனும் காந்தியடிகளின் தொண்டர். அன்றிலிருந்தது தொடர்ந்து, காரைக்குடியிலிருந்து 30 கல் தொலைவில் உள்ள நாட்டரசன்கோட்டையில் உள்ள கம்பன்சமாதிக்கோயில் வளாகத்தில் கம்பன் கவியரங்கேற்றிய பங்குனி அத்தத்திருநாளிலும், அதற்கு முந்திய மூன்றுநாட்களான பங்குனி மகம், பூரம், உத்திரம் ஆகியநாட்களில் காரைக்குடியிலும் கம்பன்திருநாளைக் கொண்டாடினார்.
      கம்பன் பிறந்த நாளை நாம் அறிய சான்றுகள் ஏதும் கிடைக்காததால், அவன்  தன் இராமாவதாரக் காப்பியத்தை அரங்கேற்றியதாக தனிப்பாடல் ஒன்றின் துணையால் அறிய நேர்ந்த கிபி 886, பெப்ருவரி 23 பங்குனி அத்த  நாளையே கம்பன் கவிச்சக்கரவர்த்தியாக அவதரித்த நாளாகக் கொண்டு  அந்நாளிலேயே கம்பன் திருநாளைக் கொண்டாடிவந்தார். கம்பன் அடிப்பொடியார் ஆண்டு தவறாது 44 ஆண்டுகள் தொடர்ந்து தம் வாழ்நாள் வரை (1982) கொண்டாடினார். 1983 முதல் அவர் விரும்பியவண்ணமே அவர்தம் தலைமாணாக்கரான கம்பன்அடிசூடியைச் செயலாளாராகக் கொண்டு அதேமுறையில் தொடர்ந்து 33 ஆண்டுகளாக கம்பன் விழா சிறப்புடன் நடைபெற்றுவருகிறது.       
  இளந்தலைமுறையினரை இனங்கண்டு நாளைய அறிஞர்களாக உருவாக்கும்வண்ணம், தமிழகம் முழுவதுமுள்ள கல்லூரி மாணாக்கர்களுக்கான கம்பராமாயணம், திருக்குறள் ஆகிய இலக்கியங்களில் பேச்சு, கட்டுரைப் போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பெறுகின்றது; இதன்வழி அடுத்ததலைமுறைப் பேச்சாளர்கள் உருவாகிவருகின்றார்கள். ஆண்டுதோறும் திரு கம்பன் அடிசூடி பழ. பழனியப்பன் தம் பெற்றோர் மீனாட்சி பழனியப்பா அறக்கட்டளை ஆய்வுப்பொழிவு நிகழ்த்தப்பெறுகின்றது;. அவை நூலாகவும் வெளியிடப்பெற்றுள்ளன. டாக்டர் சுதா சேஷய்யன் (தாய்தன்னைஅறியாத), முனைவர் அ. அ. ஞானசுந்தரத்தரசு (கம்பனின் மனவளம்), திருமதி இளம்பிறை மணிமாறன் (கம்பனில் எண்ணமும் வண்ணமும்), முனைவர் பழ. முத்தப்பன் (கம்பனில் நான்மறை),முனைவர் ச. சிவகாமி (கம்பர் காட்டும் உறவும் நட்பும்), முனைவர் தெ. ஞானசுந்தரம் (கம்பர் போற்றிய கவிஞர்), நாஞ்சில்நாடன் (கம்பனின் அம்பறாத் தூணி), திருமதி இளம்பிறை மணிமாறன் (கம்பனில் விண்ணோடும் மண்ணோடும்), திரு, சோம. வள்ளியப்பன் (எத்தனை மேலாண்மை சூட்சுமங்கள் எங்கள் கம்பனிடம்), அரிமழம் பத்மநாபன் (கம்பனில் இசைக்கலை) ஆகியோர் உரையாற்றி, அந்த உரைகள்,  அந்த  ஆண்டே வெளியிடப் பெற்றுள்ளன.  மாதந்தோறும் முதற் சனிக்கிழமைகளில் புதியகோணங்களில் கம்பன்காவியம் பற்றிய சொற்பொழிவுகள் நிகழ்த்தபெற்று, அவை அச்சில் வெளிவர தொகுக்கப் பெற்றுவருகின்றன. முனைவர் சொ.   சேதுபதியின் கம்பன்காக்கும்உலகு, முனைவர் மு.பழனியப்பன் கம்ப வானியல், முனைவர் க. முருகேசனின் தெய்வமும் மகனும்  ஆகிய நூல்களும் வெளியிடப்பெற்றுள்ளன.    சாகித்திய அகாதமியுடன் இணைந்து கம்பராமாயணத் திறனாய்வாளர்கள் என்ற பொருளில் இலக்கிய அரங்கம் நடத்தப்பெற்றது. எம்.எஸ்.சுப்புலட்சுமி, அறிஞர் அ.ச.ஞா  பேரா. ந. சுப்புரெட்டியார் செம்மல் வ.சுப. மாணிக்கம், ஆகியோரின் நூற்றாண்டு விழாக்களும் இவ்வாண்டு கொண்டாடப்பெற்றன. கவிதாயினி வள்ளி முத்தையா அவர்களின் டி.கே.சி பிள்ளைத்தமிழ், எம்.எஸ். பிள்ளைத்தமிழ் ஆகியனவும் இவ்வாண்டில் வெளியிடப்பெற்றன. இவ்வாறு  ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பொழுதும் காரைக்குடி கம்பன் கழகம் நினைந்து நினைந்துத் தமிழ்த்தொண்டுகளைச் செய்து வருகிறது.
       கம்பராமாயண ஆய்வினையும் வளர்க்க வேண்டி, 2013ஆம் ஆண்டில் கம்பன் திருநாள் பவளவிழா  தொடக்கத்தையும்,  2014ஆம் ஆண்டில் பவளவிழா நிறைவையும் ஒட்டி இரு பன்னாட்டுக் கருத்தரங்குகளைக் கம்பன் கழகம், காரைக்குடி நடத்திப் பெருமைபெற்றது. இதன் தொடர்வாக  2016 ஆம் ஆண்டு அந்தமானில் ‘‘கம்பனில் இயற்கை’’ என்ற தலைப்பில் ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கினை அந்தமான் கம்பன் கழகத்துடன் இணைந்து நடத்தியது. இதுவரை 5 கருத்தரங்கத் தொகுதிகள் வெளிவந்துள்ளன. இவ்வாண்டும்( 2017) செட்டிநாடும் செந்தமிழும் என்ற தலைப்பில் ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கினை நடத்தத் திட்டமிடப்பெற்றுள்ளது.
கருத்தரங்க நாளும், இடமும்,  நிகழ்வுகளும்
                ‘‘செட்டிநாடும் செந்தமிழும்’’ என்ற தலைப்பிலான இப்பன்னாட்டுக் கருத்தரங்கம் 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், 9 ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை அன்று நடத்தப்படத் திட்டமிடப்பெற்றுள்ளது. கோட்டையூரில் அமைந்துள்ள வள்ளல் அழகப்பர் அவர்களின் பூர்வீக இல்லத்தில் கவிதாயினி வள்ளிமுத்தையா அவர்களின் வரவேற்பில் செட்டிநாட்டு்ப் பாரம்பரியத்துடன இப்பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. கருத்தரங்கம் நிகழும் நாளன்றே ஆய்வுக்கோவையும் வெளியிடப்பெறும். அன்று முற்பகல் தொடக்கவிழாவும் பல அரங்குகளில் கட்டுரை வாசி்ப்புகளும் நிகழ உள்ளன. மதியம் 3.00 மணியளவில் இக்கருத்தரங்கு முடிந்து காரைக்குடி கம்பன்கழகம் நடத்தும் ஆண்டுவிழாவில் பங்கேற்கவும் வசதி செய்யப்பெற்றுள்ளது. ஏப்ரல் 6,7.8, 9  ஆகிய நாட்களில் காரைக்குடி கம்பன் கழகத்தின் ஆண்டுவிழா நிகழ்வுகள் நடத்தப்பெற திட்டமிடப்பெற்றுள்ளது.
கருத்தரங்கக் குழுவினர்
செட்டிநாட்டு இளவல் எம்.ஏ.எம்.ஆர்  முத்தையா, திரு. அரு.வே. மாணிக்கவேலு, திரு.த. இராமலிங்கம்,  திருமதி விசாலாட்சி கண்ணப்பன், கம்பன் அடிசூடி பழ. பழனியப்பன், முனைவர் சொ. சேதுபதி, முனைவர் இரா. குறிஞ்சி வேந்தன், முனைவர் மு.பழனியப்பன்,  முனைவர் சே. செந்தமிழ்ப்பாவை, முனைவர் மா.  சிதம்பரம், திரு. மீ. சுப்பிரமணியம், திருமதி அறிவுச் செல்வி ஸ்டீபன், சொ. அருணன்
ஆய்வுத்தலைப்புகள்:
1.               செட்டிநாட்டு இலக்கியங்கள்
  சிற்றிலக்கியங்கள், தலபுராணங்கள், நாட்டுப்புற இலக்கியங்கள் மற்றும் பிற
2.               செட்டிநாட்டுத் தமிழறிஞர்களும், செட்டிநாடு போற்றிய தமிழறிஞர்களும்
பண்டிதமணி, சிந்நயச் செட்டியார், வ.சுப.மாணிக்கனார், சோம.லெ., முரு.பழ. ரத்தினம் செட்டியார், ச. மெய்யப்பன், சுப.அண்ணாமலை, வெ தெ. மாணிக்கம், தமிழண்ணல், லெ. ப. கரு இராமநாதன் செட்டியார், கம்பனடிப்பொடி, ராய. சொக்கலிங்கனார், ஏ.கே. செட்டியார், சொ. முருகப்பா, சின்ன அண்ணாமலை, சோம. இளவரசு, இரா. சாரங்கபாணி, பா. நமசிவாயம்

3.               செட்டிநாட்டுப் படைப்பாளிகளும், செட்டிநாடு போற்றிய படைப்பாளர்களும்.
பட்டினத்தார், கம்பர், பாடுவார் முத்தப்பர், மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை, புதுவயல் சண்முகஞ் செட்டியார், தேவகோட்டை சிதம்பரஞ் செட்டியார், பாரதியார், பாரதிதாசன், வ.உ.சிதம்பரனார், ஜீவா, பனையப்பச் செட்டியார்,  கண்ணதாசன், தமிழ்வாணன், அரு. இராமநாதன், அழ.வள்ளியப்பா, அர. சிங்காரவடிவேலன், சோம. சிவப்பிரகாசம், பெரி. சிவனடியான், பூ.அமிர்தலிங்கனார், முடியரசனார்.

4.               செட்டிநாடு சார்ந்த தமிழ் வளர்க்கும் நிறுவனங்கள்
கோவிலூர் வேதாந்தமடம், குன்றக்குடி திருமடம்,  பாகனேரி காசி விசுவநாதன் செட்டியார் நூலகம் (தனவைசிய சங்கம்),  ரோஜாமுத்தையா நினைவு நூலகம், மேலைச்சிவபுரி சன்மார்க்க சபை, கணேசர் கலை அறிவியல் கல்லூரி, காரைக்குடி சார்ந்த இந்துமதாபிமான சங்கம்,  இராமசாமி தமிழ்க்கல்லூரி, அழகப்பா அரசு கலைக்கல்லூரி, அண்ணா தமிழ்க் கழகம், வள்ளுவர் கழகம்    கம்பன் கழகம், தமிழ்ச்சங்கம் மற்றும்  புதுவயல் சரசவதி சங்கம், குருவிக்கொண்டான்பட்டி கவிமணிமன்றம், பி. அழகாபுரித் தமிழ்மன்றம், குமரன், தனவணிகன், தமிழ்நாடு, தென்றல் போன்ற இதழ்கள்.

இவை தவிர  கருத்தரங்கத் தலைப்பு சார்ந்த பிற தலைப்புகளிலும் ஆய்வுக் கட்டுரைகள் வழங்கலாம். வாழும் சான்றோரைப் பற்றி எழுதலாம். வாழ்ந்துவருவோர் பற்றி எழுதும்போது அச்சான்றோரின் அனுமதியையும், வழிகாட்டலையும் பெறுவது நலம்.  




 ஆய்வுக் கட்டுரை எழுதுவதற்கான நெறி முறைகள்:
1.        ஆய்வுக் கட்டுரையைத் தனியொருவராகத் தமிழிலோ / ஆங்கிலத்திலோ வழங்கலாம்;
2.   ஆய்வுக்கட்டுரைகள் முற்றிலும் பேராளார்களின் சொந்த முயற்சியாக இருத்தல்வேண்டும். ஆய்வாளரே அவரின் கருத்துகளுக்குப் பொறுப்பாவார். கண்டிப்பாக  பிறர் படைப்புக்களைத் தழுவியதாகவோ, மின் இணைய தளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டதாகவோ இருத்தல்கூடாது. பொய்த்தகவல்கள் தரப்படக் கூடாது.  அவ்வாறு இருப்பின் அக்கட்டுரை வெளியிடப்பட மாட்டாது. பதிவுக்கட்டணம் திருப்பியளிக்கப் பெறமாட்டாது. தேர்ந்தெடுக்கப் பெறாத கட்டுரைப் பிரதிகள் எக்காரணங்கொண்டும் திருப்பி அனுப்பப்பெறாது. கட்டுரைத்தேர்வு முதலான அனைத்து நடைமுறைகளிலும் கருத்தரங்க கூட்டு நடவடிக்கைக்குழு எடுக்கும் முடிவே இறுதியானது
3.   ஆய்வுக்கட்டுரைகள் 4 தாளில் இருவரி இடைவெளியுடன் , நான்கு பக்கங்களுக்கு மிகாமல் யுனிகோடு எழுத்துருவில்  கணினி அச்சாக்கி, மின்னஞ்சல் வழி அல்லது குறுவட்டு வடிவில்  அனுப்பவேண்டும்..
4.        கருத்தரங்கு குறித்த அழைப்பு, அவசரச் செய்திகள், குறுஞ்செய்திகளாக கைபேசி / மின்னஞ்சல் வழியாக  அனுப்பப்பெறும். எனவே கட்டாயம் மின்னஞ்சல் முகவரியைத் தெரிவிக்கவும்.
5.   கருத்தரங்க ஆய்வாளர்கள் தலைப்புகளைத் தேர்ந்து காரைக்குடி கம்பன் கழக மின்னஞ்சலிலோ, முகநூலிலோ அனுப்பி ஒப்புதல் பெற்றுக்கொள்வது நலம். இதன் காரணமாக ஒரு பொருளையே பலர் எழுதுவது தவிர்க்கப்படும்.

ஆய்வுக் கட்டுரைக்கான கட்டணமும் செலுத்தும் முறையும்
ஆய்வுக்கட்டுரையுடன் ரூ 700 (ரூபாய் எழுநூறு மட்டும்) கட்டணமாகச் செலுத்தப்பெற வேண்டும்.. வெளிநாட்டுப் ஆய்வாளர்களுக்குக் கட்டணம் அமெரிக்க டாலர் மதிப்பில் $ 60/= கருத்தரங்கிற்கான கட்டணங்கள் காரைக்குடியில் மாற்றத்தக்க (Crossed Bank Demand Draft) குறுக்குக்கோடிட்ட வங்கிவரைவோலையாக “KAMBAN ACADEMY” என்றபெயருக்கு Registered Post / Speed Post / Courier Mail மூலமாக அனுப்பி உதவிட வேண்டுகிறோம்.

ஆய்வுக்கட்டுரை அனுப்பிட கடைசி நாள்
பதிவுப் படிவமும், ஆய்வுக் கட்டுரையும் கட்டணமும் 28-02-2017 க்குள் காரைக்குடி அலுவலகத்திற்கு வந்தடைய வேண்டும். காலதாமதமாக வரும் கட்டுரைகள் ஏற்கப்படாது.







காரைக்குடி கம்பன் கழகம்  - ‘செட்டிநாடும் செந்தமிழும்’
பன்னாட்டுக் கருத்தரங்கம் - பதிவுப் படிவம்
  பெயர்:        
  கல்வித்தகுதி:
 தற்போதையபணி:
 பணியிட  முழு  முகவரி  (அஞ்சல் குறியீட்டு எண்ணுடன்)

 இல்லமுழுமுகவரி:     (அஞ்சல் குறியீட்டு எண்ணுடன்)

 கைபேசி எண்:     (கட்டாயம் சுட்டப்பெறல் வேண்டும்)                                            
  e-mail id  (மின்னஞ்சல்) (கட்டாயம் சுட்டப்பெறல் வேண்டும்.)
கட்டுரைத் தலைப்பு 
கட்டணத்தொகை:
வரைவோலை எடுத்த வங்கியின்பெயர்:             
வரைவோலைஎண்:
 இடம்:
நாள்:                                                                                                                                     கையொப்பம்
(படிவத்தினைப் படிகள் எடுத்தும் அனுப்பலாம்)
கருத்தரங்கத்திற்கான தொடர்பு முகவரி
Kamban Adisudi Pala Palaniappan, secretary, Kamban Academy, "Sayee" 1E, Chettinadu Towers, 5, Valluvar Salai, Subramaniyapuram North, Karaikudi 630002, Tamilnadu, India
மின்னஞ்சல்: kambantamilcentre@gmail.com,
வலைப்பூ ; kambankazhagamkaraikudi.blogspot.com
முகநூல்: https://www.facebook.com/karaikudi.kambankazhagam
தொலைபேசி தகவல் தொடர்பிற்கு
முனைவர் மு.பழனியப்பன் 9442913985 முனைவர் மா. சிதம்பரம், 9486326526