Thursday 3 December 2015

காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் கல்லூரி மாணவ மாணவியர்க்கான போட்டிகள்

காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் கல்லூரி மாணவர்களுக்கான இரு பேச்சுப் போட்டிகள். விபரம் இதனுடன் இணைக்கப்பெற்றுள்ளது. எங்கே பார்ப்போம் உங்கள் கல்லூரியில் இருந்து மாணவர்கள் வந்து சேரட்டும்.

பள்ளி மாணவர்களுக்கு காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் போட்டிகள்

காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் பள்ளி மாணவர்களுக்கான ஒப்பித்தல் போட்டிகள்

பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் இருநிலையில் நடத்தப்படுகின்றன.
பிரிவு -1
வகுப்பு 9 முதல் 12 வரை
யுத்தகாண்டத்தில் இணைக்கப்பெற்ற பாடல் பகுதி

பிரிவு 2
வகுப்பு 6.முதல் 8 வரை

அயோத்தியா காண்டத்தில் இணைக்கப்பெற்றுள்ள பகுதி










காரைக்குடி கம்பன் கழகத்தின் டிசம்பர் (2015) மாதக் கூட்டத்திற்கான அழைப்பிதழ்

காரைக்குடி கம்பன் கழகமும் , சாகித்திய அகாதமியும் இணைந்து காரைக்குடி கிருஷ்ணா திருமண மண்டபத்தில் எதிர்வரும் 12 ஆம் தேதி மாலை ஆறுமணிக்கு கம்பராமாயணத் திறனாய்வாளர்கள் என்ற தலைப்பிலான இலக்கிய அரங்கத்தை நடத்துகின்றன. அதன் அழைப்பு பின்வருமாறு அனைவரும் வருக.

நிகழ்ச்சிக்கு சிற்றுண்டி தந்து உதவுபவர்
காளைாயர் மங்கலம் திரு எஸ் ஆர் எம் கண்ணப்பன் அவர்கள் 

காரைக்குடி கம்பன் கழகத்தின் நவம்பர் மாதக் கூட்டம்.





காரைக்குடி கம்பன் கழகத்தின் சார்பில் ரசிகமணி டிகேசி பிள்ளைத்தமிழ் என்ற நூல் நவம்பர் மாதம் நடைபெற்ற  கூட்டத்தில் வெளியிடப்பெற்றது. இவ்விழாவிற்கு நீதிபதி மாண்பமை இராம சுப்பிரமணியனார் தலைமை தாங்கினார். விழாச் சிறப்புரையை ஞானவாணி தூத்துக்குடி இளம்பிறை மணிமாறன் அவர்கள் வழங்கினார். ஏற்புரையை திருமதி வள்ளி முத்தையா வழங்கினார்.  வரவேற்புரையைக் கம்பன் கழகச் செயலர் கம்பன் அடிசூடி பழ. பழனியப்பன் வழங்கினார்.