Saturday 24 December 2016

மாணவ மாணவியர்க்கு இருபதாயிரம் ரூபாய்க்கான பரிசுப் போட்டிகள்

மாணவ மாணவியர்க்கு இருபதாயிரம் ரூபாய்க்கான பரிசுப் போட்டிகள்




காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் கம்பராமாயணப் போட்டிகள் -

கம்பராமயண ஒப்பித்தல் போட்டி -1

பேரா. மு.பழனியப்பன் தன் தந்தையார் பெயரால் நிறுவியுள்ள தமிழாகரர் பழ. முத்தப்பனார் பரிசு.

பிரிவு -9,10,11,12 மாணாக்க மாணக்கியர்களுக்கானது.

நாள்- 28.1.2017
நேரம் 0 9.30 மணி
இடம்- கிருஷ்ணா கல்யாணமண்டபம், கல்லுக்கட்டி மேற்கு, காரைக்குடி

எதிர்பார்க்கும் தகுதிகள்

உச்சரிப்பு, ஒலிநயம், மெய்ப்பாடு இவற்றோடு பொருள் அறிந்து வருதலும் சிறப்பான தேர்ச்சிக்கு வழி வகுக்கும்.

முதற்பரிசு- ரூ 1000
ஊக்கப்பரிசுகள் - பங்கேற்கும் ஐவரில் ஒருவருக்கு என ஒவ்வொருவருக்கும், ரூ 250

போட்டிக்குரிய பகுதி

அயோத்தியா காண்டம் பள்ளிப்படை படலத்தில் 22 பாடல்கள்
மைஅறு மனத்து என்று தொடங்கும் பாடல் முதல் தூய வாசகம் சொன்ன என்று தொடங்கும் பாடல் முடிய

----------------------------------------------------------------

கம்பராமாயண ஒப்பித்தல் போட்டி -2

6,7,8 ஆகிய வகுப்புகளிலபயிலும் மாணாக்க மாணக்கியர்களுக்கானது.

முதற்பரிசு ரூ1000

ஊக்கப்பரிசு - போட்டியில் பங்கேற்போரில் ஐவருக்கு ஒருவர் என ஒவ்வொரு வருக்கும் 250 ரூபாய்

மனப்பாடப்பகுதி

திருஅவதாரப்படலத்தில் 22 பாடல்கள்
மாமணி மண்டபம் மன்னி என்று தொடங்கும் பாடல் முதல் எந்தை நின் அ்ருளினால் என்று தொடங்கும் பாடல் வரை.

-------------------------------------------------------

குறிப்பு
1. பள்ளியில் இருந்து ஒவ்வொரு பிரிவிற்கும் இருவர் மட்டுமே உரிய அனுமதியுடன் கலந்து கொள்ள வேண்டும்.

2. மனப்பாடப்பகுதி வேண்டுவோர் பின்வரும் முகவரியில் தொடர்பு கொள்க.

கம்பன் கழகம்
சாயி 1. ஈ செட்டிநாடுடவர்ஸ்,
5 வள்ளுவர் தெரு, சுப்பிரமணியபுரம் வடக்கு
காரைக்குடி 630002
-----------------------------------------------------

பிற தொடர்பிற்கு
9445022137
---------------------------------------------
கம்பராமாயணப் பேச்சுப் போட்டிகள்

தமிழக அனைத்துக் கலை அறிவியல் , பொறியியல், தொழில் நுட்ப கல்வியியல் கல்லூரிகளுக்கான பேச்சுப் போட்டி - 2016-17

போட்டி நடக்கும் நாள் - 28-1-2016
இடம் - காரைக்குடி கிருஷ்ணா கல்யாண மண்டபம், கல்லுக்கட்டி மேற்கு

போட்டி -1 கம்பராமாயணப் பேச்சுப் போட்டி

காலை 10 மணி முதல்

முதற்பரிசு ரூ 3500

பேராசிரியர் தி. இராச கோபாலன் நிறுவியுள்ள அவரின் தாயார் வேம்பு அம்மாள் நினைவுப் பரிசு

இரண்டாம் பரிசு ரூ 1000

திரு, ப. மெய்யப்பன், திருமதி உமா நிறுவியுள்ள அவர்தம் புதல்வர் கதிர் பழனியப்பன் நினைவுப் பரிசு

ஊக்கப்பரிசு ரூ 500 இருவருக்கு

தலைப்பு

1 கம்பனில் மனித நேயம்
2. கம்பனில் மனித உணர்வுகள்
3. கம்பனில் மனித ஆற்றல்

இம்மூன்றில் ஒன்று அறிவிக்கப்பெறும். அது குறித்து 10 நிமிடங்கள் பேசப்படும்

போட்டிக்கு வந்து செல்ல பயணச் செலவு ஏதும் தரப்படாது.

சென்ற ஆண்டில் முதற்பரிசு வாங்கியோர் அப்போட்டியில் இவ்வாண்டு கலந்து கொள்ள இயலாது.

Saturday 10 December 2016

காரைக்குடி கம்பன் கழகத்தின் டிசம்பர் மாதக் கூட்டம் 10.12.2016

காரைக்குடி கம்பன் கழகத்தின் டிசம்பர் மாதக் கூட்டம் 10.12.2016 அன்று மாலை 6.00 மணிக்கு நடைபெற்றது. கவிதா மணிகண்டன் அவர்களின் இறைவணக்கத்துடன் விழா தொடங்கியது.
வரவேற்புரை
திரு கம்பன் அடிசூடி அவர்கள் வரவேற்புரை வழங்கினார். இவ்வரவேற்புரையில் காரைக்குடி கம்பன் கழகத்தின் விழாக்களில் பங்குகொண்டவர் கலைத்தந்தை கரு. முத்து. தியாகராசன் அவர்கள். அவர்களின் கட்டுரைகள் அடங்கிய கட்டுரைத் தொகுப்பு இன்று வெளியிடப்பெறுகிறது. இதில் அவர் காரைக்குடியில் பேசிய பேச்சும் கட்டுரையாகத் தொகுக்கப்பெற்றுள்ளது. அவரின் கலைப்பரம்பரை இன்றும் காரைக்குடி - கம்பன் கழகத்தினோடு நெருங்கிய நட்பு கொண்டு விளங்குகிறது. எனவே கலைத்தந்தை கரு. முத்து. தியாகராசன் அவர்களின் கட்டுரைகள் அடங்கிய நூலை வெளியிடுவதில் கம்பனுக்கும் பெருமை. தமிழுக்கும் பெருமை என்று உரைத்தார்.
தலைமையுரை
இவ்விழாவிற்குத் தலைமை வகித்தவர் தஞ்சாவூர் மூத்த இளவரசர் தகைமிகு எஸ் பாபாஜிராஜாசாஹேப் போன்ஸலே சத்ரபதி அவர்கள்
அவர் கலைத்தந்தை கருமுத்து தியாகராசனார் எழுதிய கட்டு;ரைகளின் தொகுப்பினை வெளியிட்டுத் தன் தலைமையுரையை வழங்கினார்.
அதில் அவர் கலைத்தந்தை அவர்களின் கட்டுரைகள் அவர் கால தமிழ்நாட்டின்சூழலை எடுத்துரைக்கின்றன. குறிப்பாக இந்து சமய அறநிலைத்துறை பற்றிய அவரின் கருத்து அனைவரும் அறிந்து கொள்ளவேண்டியது. மக்கள் தம் துன்பம் தீர தேங்காய்களை கோயிலுக்கு முன் உடைத்து வழிபடுகின்றனர். இந்தச் சிதறுகாய்களை மற்றவர்கள் உண்ணவேண்டும் என்றுதான் அவ்வாறு மக்கள் செய்கின்றனர். ஆனால் அந்தச் சிதறுகாய்களையும் ஏலம் விடும் போக்கினை இந்து சமய அறநிலையத்துறை கைவிடவேண்டும் என்று அவர் தைரியமகா எழுதியுள்ளார் அவரின் தமிழ்த்தொண்டு, ஆலைப்பணி, கல்விப்பணி போற்றுதற்கு உரியது என்றார் அவர்.
சிறப்புரை
கருமுத்து தியாகராசன் அவர்கள் எழுதிய கட்டுரைகள் அடங்கிய தொகுப்பான
ஆலைஅரசர் கருமுத்துத் தியாகராசனாரின் உரைக்கோவை என்ற நூலின் முதல்படியைப் பெற்றுக்கொண்டுச் சிறப்புரையாற்றினார்.
இவர் தன் உரையில் ஆலைஅரசரின் பண்புகளை அவரின் கம்பராமாயண ஆர்வத்தை வெளிப்படுத்தினார்.
கல்லூரியில் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்கள் வாழ்க்கைப்படிப்பினைக் கற்றுக்கொள்வதில்லை. நிறைய மதிப்பெண்கள் வாங்குகிற அவர்களால் வாழ்க்கையில் வெற்றி பெற முடியவில்லை. இதற்குக் காரணம் என்ன? படிப்பை வெறும் படிப்பாக மட்டும் மாணவர்கள் கற்கிறார்கள். படிப்பினை கலை, நடனம், இசை கலந்து தரவேண்டும். ஏழிசையாய் இசைப்பயனாய் என்று தேவாரம் இசைவடிவில் ஆண்டவனைக் காண்கிறது. இக்கால இளைஞர்களின் வாழ்க்கை; மேம்பட கல்வி வெறும் மனப்பாடப்பகுதியாக இல்லாமல் மனிதத்தை வளர்க்கும் பண்பாடு,இசை, கலைத் திறன் கொண்டதாக இருக்கவேண்டும் என்றார்.
ஏற்புரை
திரு ஹரி தியாகராசன் அவர்கள் ஆலையரசர் கருமுத்து தியாகராசனாரின் உரைக்கோவை என்ற நூலைத் தொகுத்த தொகுப்பாசிரியர் ஆவார்.
இவர் தன் தாத்தாவைப் பற்றிப் பல செய்திகளைப் பகிர்ந்து கொண்டார். தாத்தாவின் பழைய பெட்டிகளில் உள்ள கணக்குகள், கட்டுரைகள் அவர் வாழ்வின் வெற்றிகளை அள்ளித்தந்தவையாகும்.
அவர் பல ஆலைகள் கல்வி நிறுவனங்கள் கோயில்கள் ஆகியவற்றை நிர்வகித்தவர்.
அவரின் கல்வி நிறுவனமொன்றில் அசைவ உணவு வழங்கவேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை வைத்து படிப்புநிறுத்தப் போராட்டத்தைச் செய்துவந்தனர். தங்களின் உடல்உழைப்பிற்கு ஏற்ற அசைவ உணவினை கல்லூரிச் சிற்றுண்டிச்சாலை, உணவகம் ஆகியவற்றில் வழங்கவேண்டும் என்ற அவர்களின் கோரிக்கையைக் கனிவாகக் கேட்டார் ஆலைஅரசர்.
அதன் பின் அவர்களிடம் பவர் power என்ற ஆங்கிலச் சொல்லின் பொருள் தெரியுமா என்று கேட்டார். அதற்கு அவர்கள் பவர், எனர்ஜி ஆகியவற்றின் பொருள் எங்களுக்குத்தெரியும் என்றனர். சரி என்று கேட்டுக்கெர்ணடார் ஆலைஅரசர்.
அதன்பின் அவர்களிடம் பவரை எந்தக் குறியீட்டால் அளக்கிறீர்கள் என்றார்.அதற்கு மாணவர்கள் குதிரைத் திறன் என்பதாக அளக்கிறோம். அந்தக் குதிரை அசைவம் உண்கிறதா, சைவம் உண்கிறதா என்று கேட்டார். மாணவர்கள் தலை குனிந்தனர். மேலும் யானை அசைவ உணவு உண்கிறதா.. குதிரை, யானை போன்ற விலங்குகளே சைவ உணவால் சக்தி பெறும்போது மாணவர்களுக்கு மனிதர்களுக்குச் சைவ உணவே போதுமானது என்று அவர் எளிமையாக மாணவர்களிடம் தன் கொள்கையைக் காட்டி சைவ உணவே தன் கொள்கை என்பதை நிறுவினார்.
இதன்பிறகு முனைவர் மு.பழனியப்பன் நன்றியுரை வழங்க விழா இனிதேநிறைவு பெற்றது

Thursday 24 November 2016

கம்பன் கழகம், காரைக்குடி டிசம்பர் (2016) மாதக் கூட்டம்



கம்பன் கழகம், காரைக்குடி

புரவலர் எம்.எ.ஏம். ஆர் முத்தையா (எ) ஐயப்பன் அவர்கள்

அன்புடையீர்
வணக்கம்
கம்பன் புகழ்பாடிக் கன்னித்தமிழ் வளர்க்கும் காரைக்குடி தாய்க் கம்பன் கழக டிசம்பர் மாதத் திருவிழா 10.12.2016 ஆம் தேதி இரண்டாவது சனிக்கிழமை மாலை ஆறுமணிக்கு கல்லுக்கட்டி மேற்கு கிருஷ்ணாக கல்யாண மண்டபத்தில் நிகழ்கின்றது.
கம்பன் கழகக் கொடைஞரான ஆலை அரசர் தனித்தமிழ் வளர்ச்சிக்கு வித்திட்ட ~தமிழ்நாடு| இதழைத்தொடங்கி அதன்ஆசிரியராகவும் விளங்கி அரும்பணி ஆற்றிய  கலைத்தந்தை கருமுத்து தியாகராசனார் ஆற்றிய உரைகளின் தொகுப்பு நூல் இவ்விழாவில்  அறிமுகம் செய்யப் பெறுகிறது. (இந்நூலைத தொகுத்தவர் கருமுத்து தியாகராசனாரின் பெயரர் ஹரிதியாகராசன் ;ஆவார். இதனை வானதிப்பதிகப்பகம் வெளியிட்டுள்ளது
அனைவரும் வருக.

நிகழ் நிரல்
இறைவணக்கம் - திருமிகு கவிதா மணிகண்டன் அவர்கள்
வரவேற்புரை திரு. கம்பன் அடிசூடி அவர்கள்
நூல்வெளியீடும் த்லைi;மயுரையும்- தஞ்சாவூர் மூத்த இளவரசர் தகைமிகு
எஸ். பாபாஜி ராஜாசாகேப் போன்ஸ்லே சத்ரபதி அவர்கள்
சிறப்புரை
திருமிகு இளம்பிறை மணிமாறன்அவர்கள்
ஏற்புரை திரு. ஹரி தியாகராசன் அவர்கள்
நன்றியுரை பேரா மு,பழனியப்பன்

கம்பன் புகழ் பருகிக் கன்னித்தமிழ் வளர்க்க அன்பர்கள் யாவரும் வருக
அன்பும் பணிவுமுள்ள
கம்பன் கழகத்தார்

நன்றி
அரு.வே. மாணிக்கவேலு சரசுவதி அறக்கட்டளை அன்னைமெடிக்கல்ஸ், பொன்னமராவதி
நமது செட்டிநாடு இதழ்
திரு ரவி அப்பாசாமி நிர்வாக இயக்குநர், அப்பாசுவாமி ரியல் எஸ்டேட்ஸ்
தி.நகர் சென்னை


Saturday 12 November 2016

காரைக்குடி கம்பன் கழகத்தின் ;நவம்பர் மாதக் கூட்டம் 2016

காரைக்குடி கம்பன் கழகத்தின் ;நவம்பர் மாதக் கூட்டம் 2016

காரைக்குடி கம்பன் கழகத்தின் ;நவம்பர் மாதக் கூட்டம் வெகு சிறப்புடன் இன்று நடைபெற்றது.
கோட்டையூர் கவிதாயினி வள்ளி முத்தையா அவர்கள் எழுதிய எம்.எஸ். பிள்ளைத்தமிழ்
ூலை இசைவாணர் நித்யஸ்ரீ மகாதேவன் வெளியிட புதுக்கோட்டை பாரதி பாபு அவர்கள் 
பெற்றுக்கொண்டு பிள்ளைத்தமிழ் நூலை அறிமுகம் செய்தார்கள். வெளியிட்டு நித்ய ஸ்ரீ 
அவர்கள் சிறப்பானதொரு இசையுரையை வழங்கினார். வள்ளி முத்தையா அவர்கள்
 எழுதிய காப்புப் பாடலில் தொடங்கி எம்எஸ் அவர்களின் கிருஷ்கானத்துடன் 
நிறைவுசெய்தார்கள். எப்படிப் பாடினரோ என்ற 

























லைப்பில் திருச்சி விஜயசுந்தரி அவர்கள் எம்.எஸ் பற்றி சிறப்புரையாற்றினார்.
 முன்னதாக செல்வி கவிதா அவர்கள் எம்.எஸ். நினைவாக அவர்தம் 
பாடல்களைப் பாடினார். சிகப்பி இல்லத்தின் மூத்த வளங்களுள் ஒருவரான 
சிறுகூடல் பட்டி முத்தாத்தாள் ஆச்சி அவர்கள் கந்தனைப் பாராட்டிப் பாடல்கள்
 பாடினார்கள். மிகஅதிகமான அளவில் இன்றைக்கு காரைக்குடி பெருமக்கள் 
வருகைதந்திருந்தனர். கார்கள் நிற்க இடமில்லாமல் வெளிpயிடங்களில் 
நிறுத்தப்பெற்றன. எம்எஸ் பிள்ளைத்தமிழ் இருபது ரூபாய் விலையில் 
கிடைக்கிறது. இப்புகைப்படங்களில் சில முக்கியமான நிகழ்வுகளைப் 
படம்பிடித்துள்ளேன் காரைக்குடி அழகப்பா பல்கலைகயின் முன்னைப் 
பதிவாளர் மாணிக்கவாசகம் அவர்களை பதிவரங்க முகப்பில் கம்பன் 
கழகப் பதிவேட்டில் பதிவு செய்ய வைத்துள்ளோம். பதிவாளரையே 
பதிய வைக்கச் செய்த பெருமை எங்களைச்சாரும்.
காசிஸ்ரீ அருசோ அவர்கள் இந்நிகழ்ச்சிக்கு வருகைதந்தார். அன்னாரின்
 நிகழ்ச்சிகளை ஒத்தி வைத்துவிட்டு வருகைதந்ததுமிக்க மகிழ்ச்சியை 
அளிக்கிறது. இராம இராமநாதன் அவர்களும் வருகைதந்திருந்தார். ஊட்டி கல்லூரியின் முன்னைப் பேராசிரியர் மாணிக்கவாசகம், அழகப்பா கல்லூரி மு;ன்னைப் பேராசிரியர் 
கதி கணேசன் , அழகப்பா பல்ககைலயின் பாலசுப்பிரமணியம், 
செந்தமிழ்ப்பாவை ஆகியோரின் வருகையும் குறிக்கத்தக்கது,

Saturday 24 September 2016

காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் இசையரசி எம்.எஸ். சுப்புலஷ்மி நூற்றாண்டு விழா

காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் இசையரசி எம்.எஸ். சுப்புலஷ்மி நூற்றாண்டு விழா




அன்புடையீர்
வணக்கம்

கம்பன் புகழ் இசைத்துக் கன்னித் தமிழ் வளர்க்கும் கம்பன் கழக அக்டோபர் மாதத் திருவிழா 1.10.2016 ஆம் நாள் சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு கல்லுக்கட்டி மேற்கு ,கிருஷ்ணா திருமண மண்டபத்தில் இசையரசி எம்.எஸ். புகழிசை பரவு நூற்றாண்டு விழாவாக காரைக்குடி கம்பன் கழத்தால் கொண்டாடப் பெறுகின்றது.

இறைவணக்கம் - செல்வி கவிதா மணிகண்டன்

இசைத் தோரணவாயில்- திரு கம்பன் அடிசூடி பழ. பழனியப்பன் 
அவர்கள்

இசைசேர்த் தலைமையும் எம்.எஸ். இசைத்த கம்பன் கவி அமுதம் குறுந்தகடு வெளியீடும்
திருவையாறு தமிழ்நாடுஅரசு இசைக் கல்லூரியின் மேனாள் முதல்வர் முனைவர் இராம. கௌசல்யா

இசைக்கோலம்
பத்ம பூஷண் சங்கீத கலாநிதி இசைப் பேரறிஞர் மதுரை ஸ்ரீ டி. என் சேஷகோபாலன்

நன்றியுரை பேரா. மு. பழனியப்பன்

சீர் இசை உண்டி




--------------------
2016 செப்டம்பர் மாதம் 16 ஆம் தேதி நூற்றாண்டு விழா கண்ட இசையரசி எம்.எஸ். சுப்புலட்சுமி அவர்கள் கம்பன் கழகத்திற்கு பெருங்கொடை அளித்ததோடு கம்பன் கவி அமுதம் என தனி இசை ஒலி நாடாவாகவும் வழங்கிப் பெருமை சேர்த்தமைக்கு நன்றி இசைக்கும் இனிய திருவிழா இது

கம்பன் புகழ்பாடிக் கன்னி இசைத் தமிழ் வளர்க்க
அன்பர்கள் யாவரும் வருக
அன்பும் பணிவும் இசைந்த
கம்பன் கழகத்தார்
நன்றி
கம்பன் தமிழமுதம் பருக வருகவென வரவேற்கும்
பொன்னமராவதி அன்னை மெடிக்கல்ஸ் அரு.வே மாணிக்கவேலு, சரசுவதி அறக்கட்டளை
நமது செட்டிநாடு இதழ்
நிகழ்ச்சி உதவி இசைந்தோர்
1.10.2016 அன்று 81 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா நாளும் 16.10. 2016 ஆம் நாள் சதாபிஷேக விழாவும் இணைந்து இசைந்த புகழ் மெ.செ. ராம.மெய்யப்பச் செட்டியார் , அழகம்மைஆச்சி தம்பதியருக்குப் பல்லாண்டு, பல்லாண்டு இசைந்து மகிழ்கின்றோம்

கம்பன் கவி அமுத இசைக் குறுந்தகட்டினை விழா அரங்கில் சலுகை இசைந்த விலையில் அன்பர்கள் பெற்று இசை பருகி இன்புறலாம்.

Friday 15 July 2016

கம்பன் அடிப்பொடி சா. கணேசனாரின் 35 ஆவது புகழ்த்திருநாள்

கம்பன் கழகம்,

காரைக்குடி

69 ஆம் கூட்டம்

அன்புடையீர் 

வணக்கம். கம்பன் புகழ்பாடிக் கன்னித் தமிழ் வளர்க்கும் கம்பன் கழக நிறுவனர் கம்பன் அடிப்பொடி சா. கணேசனாரின் 35 ஆவது புகழ்த்திருநாள் 28-7-2016 ஆம் தேதி வியாழக்கிழமை மாலை 6.00மணிக்கு கல்லுக்கட்டி மேற்கு, கிருஷ்ணன் கோயிலை அடுத்துள்ள கிருஷ்ணா திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. 

நிகழ் நிரல்

இறை வணக்கம்: செல்வி கீழப்பூங்குடி கவிதா மணிகண்டன்

வரவேற்புரை: முனைவர் மு.பழனியப்பன்

நிறுவனர் திருநாள் நாதோபாசனை

பன்னிரு திருமுறை, பஞ்சபுராணம், வேதமுழக்கம்

வேத முழக்கம்- ஜிஎஸ்வி பைரவ குருக்கள்

பஜனை பக்திப் பாமாலை திரு. எஸ். பி. முத்துக்குமரன் குழுவினர்

கம்பன் அடிப்பொடி சா.கணேசனாரின் குடும்பத்தாரைக் கௌரவித்தல்

அறிமுகம் திரு. கம்பன் அடிசூடி

திரு. ச. கண்ணன் , திருமதி உமையாள் கண்ணன்

திரு.ச. கம்பராமன், திருமதி அழகம்மை கம்பராமன்

திருமதி வாசுகி அண்ணாமலை, திரு. மெ. அண்ணாமலை

திருமதி கண்ணகி சாமிநாதன், திரு. சா.க. சாமிநாதன்

 சிறப்புரை

பேராசிரியர் திருமதி சரசுவதி இராமநாதன்

சுவைஞர்கள் கலந்துரையாடல்

நன்றியுரை, பேரா. மா. சிதம்பரம்

சிற்றுண்டி

கம்பன் அடிப்n;பாடி புகழ் பருகிக் கன்னித்தமிழ் வளர்க்க அன்பர்கள் யாவரும் வருக

அன்பும் பணிவுமுள்ள

கம்பன் கழகத்தார்

நன்றி

காளையார் மங்கலம் திரு. சொ. ராம. கண்ணப்பன் பி.ஈ.

தலைமைப் பொறியாளர், பணிநிறைவு, தமிழக அரசு நெடுஞ்சாலைத்துறை

திருமதி மீனாட்சி ஆச்சி

தம்பதியருக்குப் பல்லாண்டு பல்லாண்டு


கம்பன் அடிப்பொடியின் மைத்தனர் மகன்

திரு.சா.லெ. ராம.ராம. மீ. சுப்பிரமணியன்

(புகைப்படக்கலைஞர் சுப்பு)

திருமதி சிவகாமி

தம்பதியருக்குப் பல்லாண்டு, பல்லாண்டு 


Thursday 26 May 2016

கம்பன் கழகம் காரைக்குடிஜுன் மாதக் கூட்டம் 4-6-2016

கம்பன் கழகம் காரைக்குடிஜுன் மாதக் கூட்டம் 4-6-2016

கம்பன் கழகம்
காரைக்குடி
அன்புடையீர்
வணக்கம்
கம்பன் புகழ் பாடிக் கன்னித் தமிழ் வளக்ர்கும் ஜுன் மாதக் கூட்டம் 4-6-2016 ஆம் தேதி சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு காரைக்குடி கல்லுக்கட்டி மேற்குகிருஷ்ணா கல்யாண மண்டபத்தில் நடைபெறுகிறது.
இறைவணக்கம்-செல்வி எம். கவிதா
வரவேற்புரை- திரு. கம்பன் அடிசூடி
உரை
உடையவரும் உடையாரும்
முனைவர; திருமதி எஸ். சுஜாதா
உதவிப் பேராசிரியர், தமிழாய்வுத் துறை
ஸ்ரீமத் ஆண்டவன் கலை அறிவியல் கல்லூரி, திருவரங்கம்
சிறப்புரை
வானம் சிரித்தது
நகைச்சுவைத் தென்றல் திரு. இரெ. சண்முகவடிவேல்
திருவாரூர்
சுவைஞர்கள் கலந்துரையாடல்
நன்றியுரை திரு. மா. சிதம்பரம்
கம்பன் புகழ் பாடிக் கன்னித்தமிழ் வளர்க்க அன்பர்கள் யாவரும் வருக.
அன்பும் பணிவுமுள்ள
கம்பன் கழகத்தார்
நிகழ்ச்சி உதவி
பொன்னமராவதி அன்னை மெடிக்கல்ஸ் திருமிகு அரு.வே மாணிக்கவேலு செட்டியார் சரசுவதி ஆச்சி தம்பதியருக்குப் பல்லாண்டு