காரைக்குடி கம்பன் கழகத்தின் 2013 ஆம் ஆண்டு ஜுன் மாதக் கூட்டம் காரைக்குடி கம்பன் மணிமண்டபத்தில் 1-6-2013 அன்று மாலை ஆறுமணி அளவில் நடைபெற உள்ளது.
இவ்வரங்கில் கம்பராமாயணத்தில் கதை மாந்தர் உருவாக்கமும் நுட்பங்களும் என்ற தலைப்பில் முனைவர் ந. விஜய சுந்தரி அவர்கள் அறக்கட்டளைப் பொழிவுரை ஆற்ற உள்ளார். திருப்பெரும்புதூர் கோ. வேதவல்லி அம்மாள் பெயரில் பேராசிரியர் ந. சேஷாத்திரி அவர்கள் நிறுவியுள்ள இந்த அறக்கட்டளை ஆண்டுதோறும் கம்பனில் புதிய தலைப்பில் இளைய நண்பர்களைப் பேச வைத்து அப்பேச்சினை நூலாக வெளியிடும் நோக்கில்செயல்பட்டு வருகின்றது.இந்நிகழ்விற்கு கம்பன் தமிழாய்வு மையத்தின் இயக்குநர் கம்பன் அடிசூடி அவர்கள் தலைமை ஏற்கிறார்கள்.
அனைவரும் வருக.
கம்பன் புகழ்பாடிக் கன்னித்தமிழ் வளர்ப்போம்.