Thursday 19 September 2013

பூவந்தி கல்லூரியுடன் கைகோர்க்கிறது கம்பன் தமிழாய்வு மையம்

மதுரை சிவகாசி நாடார்கள் பயோனியர்  மீனாட்சி பெண்கள் கல்லூரி, பூவந்தி
காரைக்குடி கம்பன் தமிழாய்வு மையத்துடன் இணைந்து
20.09.2013 வெள்ளிக்கிழமையன்று காலை 10.00 மணியளவில் நடத்தும் 
முத்தமிழ் விழா
தலைமை- திரு. கே. சி. ஏ. டி. சிதம்பரம் அவர்கள் (கல்லூரியின் தலைவர்)
வாழ்த்துரை -திருமதி சி. இராமலட்சுமி அவர்கள் (கல்லூரி முதல்வர்)
                                 உரையரங்கம்
தலைவர்- கம்பன் அடிசூடி பழ. பழனியப்பன் அவர்கள்
                      (செயலர், கம்பன் கழகம், காரைக்குடி)

உரையாளர்கள்
 திரு. நாக துரையரசு
முனைவர் மு.பழனியப்பன்
முனைவர் யாழ்.சு. சந்திரா

நாட்டிய நாடகம்- மாணவியர்
அன்புடன் அழைக்கின்றோம்

நிர்வாகத்தினர், முதல்வர், பேராசிரியைகள், மாணவிகள்



தினமணி இலக்கியச் சங்கமத்தில் புனிதவளனார் கல்லூரி கருத்தரங்கம் பற்றிய அறிவிப்பு

இலக்கியச் சங்கமம்

First Published : 16 September 2013 01:06 AM IST
❒ காரைக்குடி கம்பன் தமிழாய்வு மையமும் திருச்சிராப்பள்ளி தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரியின் தமிழாய்வுத்துறையும் இணைந்து நடத்தும் "கம்பனில் அறநெறிகள் - கம்பராமாயண' தேசியக் கருத்தரங்கம். தலைமை: ஆண்ட்ரூ பிரான்சிஸ்; பங்கேற்பு: சொ.சேதுபதி, இ.சூசை, மு.பழனியப்பன், பழ.முத்தப்பன், பொன்.புஷ்பராஜ், பீ.ரகமத் பீபி, பழ.பழனியப்பன், அ.குழந்தைசாமி; நூலக அரங்கம், தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி, திருச்சி; 16.9.13 காலை 9.00.
நன்றி - தினமணி

“கம்பன் காட்டிய நெறிநின்றால் மானுடம் தழைக்கும்;;;;, உலகநேயம் ஓங்கும்” – கம்பன் அடி சூடி உரை



திருச்சிராப்பள்ளி தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரியின் வளனார் தமிழ்ப் பேரவையும் காரைக்குடி கம்பன் தமிழாய்வு மையமும் இணைந்து ‘கம்பனில் அறநெறிகள்’  என்ற தலைப்பில் கம்பராமாயண தேசியக் கருத்தரங்கினை 16.9.2013 அன்று காலை 10 மணியளவில் தொடங்கி நடத்தினர்.

  

    வளனார் தமிழ்ப்;;பேரவையின் தலைவர் பேராசிரியர் இ. சூசை வரவேற்றார். துறைத்தலைவர் முனைவர் உ. இராசு நோக்கவுரையாற்றினார். தலைமை உரையாற்றிய கல்லுரி முதல்வர் அருள்திரு. ஆண்ட்ரூ பிரான்சிஸ் சே.ச. அவர்கள் குறிப்பிட்டதாவது: “காலத்தின் தேவை கருதி நடத்தப்படும் கருத்தரங்கு இது. இன்றைய தலைமுறையினருக்கு வேண்டிய அறநெறிகளை கம்பன் வழிநின்று காட்டும் அறிஞர்களின் பேருரைகள் வாழ்க்கையில் பின்பற்றத்தக்கவை. சாதி, சமய, மதபேதம் கடந்து மனிதத்தைப் பேணும் கம்பன் நெறிகள் காலத்தை வென்று நிற்பவை” என்றார்.

    தொடர்ந்து, ‘ கம்பனில் இலக்கிய நெறிகள்’ என்ற தலைப்பில் கருத்துரை வழங்கினர் முனைவர் சொ. சேதுபதி. “கம்பன் தமிழில் தோன்றிய உலக மகாகவி, சைவன் ஆகப்பிறந்து வைணவநெறி துலக்கி, அனைத்துச்சமயப் பொதுமையும் பேணிய சமரச கவி, தனக்கு முன்னைய தமிழ் இலக்கியச் செழுமைகளை உள்வாங்கித் தன்காலத்தில் காப்பியமாக்கித் தந்தான் கம்பன். அவன்வழி நின்று அடுத்த யுகத்திற்கு மாற்றிக் கொண்டார் மகாகவி பாரதியார். பூமிக்கு அணி செய்வது, ஆன்றபொருள் தருவது, அகத்துறைகள் உடையது, ஐந்திணை தழுவியது, ஒளி பொருந்தியது, குளிர்ந்த நடை உடையது, எண்ணன்ற ஒழுக்கம் தருவது – எனக் கோதாவரி ஆற்றோடு இலக்கிய நெறிகளையும் கம்பன் அடையாளப்படுத்துகிறான் என்றார்.

    தொடர்ந்து கம்பன் காட்டிய இலக்கண நெறிகள் பற்றி, பேராசிரியர் இ. சூசை விளக்கினார்: வடசொற்களைத் தூயதமிழ்ச் சொற்கள் ஆக்கியவன் கம்பன்: அவனால் விபீஷணன்  - வீடணன் ஆனான். கௌசல்யா – கோசலை ஆனாள், ராமன் - இராமன் ஆனான். வான்மீகி தந்த பாத்திரங்களைத் தமிழ்இலக்கண மரபுப்படி மாற்றிச் செழுமைப்படுத்தியவன் கம்பன். இலக்கணத்தை உடைத்த இலக்கியவாதி கம்பன் அதன்மூலம் புதிய இலக்கணம் படைத்துக் கவிச்சக்கரவர்த்தியாகிப் பொலிகின்றான் என்றார்.

    அடுத்து, கம்பன் காட்டிய அரசியல் நெறிகள் பற்றிப்பேசினார், முனைவர் மு. பழனியப்பன்: இளையவர்ளுக்கு வழிவிடும் போக்கு, கம்ப இராமாயணத்தில் காணப்படுகிறது.

தசரதனுக்குக் கன்னத்தில் தோன்றிய நரை இராமனிடத்தில் அரசை ஒப்படைக்கச்; கூறியதாம். இராமன் மகுடம் சூடும் வேளையில் வசிட்டமுனிவர் அவனுக்கு அரசியல் அறங்களை அறிவுறுத்துகிறார். சூது எந்நாளும் கொள்ளவேண்டாம். போர்ஒடுங்கும், புகழ்ஒடுங்காது. பெண்கள் மீதான மோகத்தைக் குறைத்துக்கொண்டால் நரகம் இல்லை” என்று குறிபிட்டார்.

    கம்பனில் ஆன்மீக நெறிகள் என்ற தலைப்பில் முனைவர் பழ. முத்தப்பன் அவர்கள் கருத்துரை வழங்கினார். கம்பன் பாடிய கடவுள் பொதுமைக்கடவுள். மூன்றுதெய்வங்களுக்கும் மேலானகடவுள். இல்லை என்ற சொல்லிலும் இன்;மையாகக் கடவுள் நிறைந்து இருக்கிறார், என்றார்;. கம்பனில் தோழமை  நெறிகள் என்ற தலைப்பில் பேரா. புஷ்பராஜ் அவர்கள் பேசினார். இராமன்; தோழமை உணர்வுடன் அனைவரிடமும் பழகினான். இலங்கை வெற்றி வீடணன் தோழமை தந்த வெற்றியாகும். குகனோடு ஐவரானோம் என்ற கருத்தின்படி ஐவரும் நிலம்ஆளச் சொல்கிறாள் கோசலை என்றார்.

    முனைவர் பீ. ரகமத் பீபி அவர்கள் கம்பனில் இல்லற நெறிகள் என்ற தலைப்பில் பேசினார். கம்பனது படைப்பில் உயர்நத பண்பானப் பெண்களுக்கான

 இல்லற நெறிகள் பற்றிப் பேசினார். சாதம் வடித்தலும் கடமைகள் புரிவதிலும் மட்டுமல்லாமல் தங்கள் கணவர்கள் ;தடுமாறும் போது எந்த வகையில் சீதை,கைகேயி, தாரை போன்றோர் தங்கள் நிலையை எப்படி வலியுறுத்தினர் என்பதை அழகாக எடுத்துரைத்தார்.

    பங்கேற்ற மாணவர்களுக்குச் சான்றிதழ் வழங்கி நிறைவுப் பேருரை ஆற்றினார், காரைக்குடி கம்பன் கழகத்தமிழாய்வு மைய இயக்குநர் கம்பன்அடிசூடி பழ. பழனியப்பன். பெற்றோர்களையும், குருவையும் தெய்வமாகப் போற்றும் அறநெறி கம்பன் காட்டிய அறநெறியாகும். தாயிற் சிறந்த கோயிலும் இல்லை. தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை என்று இராமன் வாழ்ந்து காட்டிய நெறி. கம்பன் நமக்;குக்காட்டிய அறநெறி: அவன் காட்டிய வழியில்,  அரசும் , ஆன்மிகவுலகும் சென்றாள் அன்பில் இல்லறம் செழிக்கும், நல்லறம் ஓங்கும், வேறுல குழுவை எல்லாம் மானுடம் வெல்லும். அதற்கு நாற்றாங்காலாக இக்கருத்தரங்கம் அமைகிறது என்றார்.

    துறையின் மேனாள் தலைவர். முனைவர் குழந்தைசாமி நன்றியுரை கூறினார். இலால்குடி பல்கலைக்;;;; கழக  உறுப்புக்கல்லுரி, மண்ணச்ச நல்லூர் சிதம்பரம் பிள்ளைக் கல்லூரி, கும்பகோணம் இதயா கலை அறிவியல் கல்லூரி, புனித சிலுவை கல்லூரி. உருமு தனலட்சுமி கல்லூரிகளிலிருந்து  120 மாணவர்கள் பங்கேற்றனர். தமிழ்ச்சங்க அமைச்சர் புலவர் சிவக்கொழுந்து, புலவர் நாச்சிமுத்து, புலவர் கேசவன் உள்ளிட்ட பல தமிழறிஞர்கள் பங்கேற்றுச்சிறப்பித்தனர்.