Wednesday 29 April 2020

காரைக்குடி கம்பன் கழகத்தின் கண்ணீர் அஞ்சலி


கம்பன் அடிப்பொடி ஐயா சா. கணேசன் அவர்களோடு கரம் கோர்த்து கம்பன் விழாவை நடத்தியோர் பலர். பொருளாலும், செயலாலும் கம்பன் தமிழ் தழைக்க உழைத்தோர் பலர்.
அவருள்ளும் ஒருவர்
திரு. லெ. கணேசன் என்ற பெரியவர்.
கம்பன் மேடையில் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக காலக்கணக்கினைக் கணக்கிடும் அரிய பணியைக் கம்பன் அடிப்பொடியார் காலத்திலும் அதற்குப் பின்பும் செய்து வந்தவர்.
இவரன்றி மேடையில் சிவப்பு விளக்கு எரியாது. இவரே அதன் இயக்குநர். சரியான நேரத்தில் சரியாக நேர வரையறை செய்த பெருந்தகை. இவரைக் கண்டால் அனைவரும் சிவப்பு விளக்கும் இவரது நேரக்கட்டுப்பாடும் நினைவிற்கு வரும். அயராது பணி செய்த அவரின் பணி பாராட்டுக்கு உரியது.
இலக்கிய மேடையைக் காலத்தால் கணித்த அவர் நேற்று (28-4-2020) இயற்கை எய்தினார். காரைக்குடி கம்பன் கழகம் அவரின் தன்னேரிலாப் பணிக்குத் தலை சாய்த்து நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது. காலக் கட்டுப்பாட்டாளருக்கே காலம் கட்டுப்பாட்டை விதிக்கிறது.
அன்னாரின் இறுதிச்சடங்குகள் அவரின் இல்லத்தில் (அண்ணாமலை விலாஸ்
மேலமடம் காரைக்குடி) இன்று மதியம் நடைபெறுகிறது. அவரின் இழப்பில் வாடும் குடும்பத்தாருக்கு எம் ஆழ்ந்த இரங்கல்கள்.

No comments:

Post a Comment