Thursday 31 October 2013

உலகத் தமிழ் கம்பராமாயண ஆய்வுக் கருத்தரங்கம் 2014

2014 மார்ச் 14 முதல் 17 வரை நிகழவுள்ள கம்பன் திருநாள் பவளவிழா நிறைவை ஒட்டி 15-3-2014 (சனிக்கிழமை) மற்றும் 16-3-2014 (ஞாயிற்றுக்கிழமை) ஒரு முழுநாட்களிலும் உலகத் தமிழ் கம்பராமாயண ஆய்வுக் கருத்தரங்கம் துறைதோறும் கம்பன் என்ற தலைப்பில் இவ்வாண்டு கூட்டப் பெறுகிறது. விரிவான அறிக்கை வேண்டுவோர் எழுதிப் பெற்றுக்கொள்ளலாம். உலகம் முழுவதும் பரவித் தமிழாயும் அறிஞர்கள் பேராசிரியப் பெருமக்கள்,ஆய்வாளார்கள், ஆர்வலர்கள், சுவைஞர்கள் பங்கேற்றுக் கம்பன்புகழ்பாடிக் கன்னித்தமிழ் வளர்க்க வருக.

No comments:

Post a Comment