Friday 5 April 2013

கம்பன் கழகப் பவளவிழா நிகழ்ச்சிகள்


கம்பநாட்டுப் பாராளுமன்றத்தில்... குகனுக்கு "பரிவால் மிக்க பண்பாளர்' விருது
By காரைக்குடி
First Published : 28 March 2013 09:31 AM IST
காரைக்குடியில் நடைபெற்ற கம்பநாட்டுப் பாராளுமன்றம் பவள விழா சிறப்புக் கூட்டத்தில், பரிவால் மிக்க பண்பாளராக குகனை ஏகமனதாகத் தேர்ந்தெடுத்து அறிவிக்கப்பட்டது.
காரைக்குடி கம்பன் கழகம் சார்பில் 75 ஆம் ஆண்டு பவளவிழாவையொட்டி, செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற இந் நிகழ்ச்சியை பேராசிரியர் அய்க்கண் தொடக்கி வைத்தார். சுழற்சங்க முன்னாள் ஆளுநர் எஸ். பெரியணன் கம்பன் அடிப்பொடி அஞ்சலி வழங்கினார்.
 அதைத் தொடர்ந்து, கம்ப நாட்டுப் பாராளுமன்ற பவள விழா சிறப்புக் கூட்டம் தொடங்கியது. சபாநாயகராக பேராசிரியர் தி. ராசகோபாலன், பாராளுமன்றச் செயலராக பேராசிரியர் சொ. சேதுபதி ஆகியோர் இருந்தனர். 
நிகழ்ச்சியைத் துவக்கிவைத்துப் பேசிய தி.ராசகோபாலன், இது கவிச் சக்கரவர்த்தி கம்பனுடைய பாராளுமன்றம். கம்பன் அடிப்பொடி சா.கணேசன், கி.வா.ஜ. போன்றோரால் பெருமைப்படுத்தப்பட்டிருக்கிறது என்றார்.
பரிவால் மிக்க பண்பாளர் குகனா, கும்பகர்ணனா, சடாயுவா என்பது தனித் தீர்மானமாக எடுத்துக் கொள்ளப்பட்டது.
குகனே என, ஆளுங்கட்சி சார்பில் பேராசிரியர் த.ராமலிங்கம், திருச்சி இரா.மாது, புதுக்கோட்டை பாரதி பாபு ஆகியோர் பேசினர்.
கும்பகர்ணனே என, எதிர்க்கட்சி சார்பில் இலங்கை ஜெயராஜ், மு.பழனியப்பன், சித்ரா சுப்பிரமணியன் ஆகியோர் பேசினர்.
சடாயுவே என, சுயேச்சை உறுப்பினர்களாக ஸ்ரீரங்கம் ந.விஜயசுந்தரி, ஜெயங்கொண்டான் ஆகியோர் பேசினர். இறுதியில், குகனே பரிவால் மிக்க பண்பாளர் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
 

No comments:

Post a Comment