Saturday 18 January 2014

அந்தமானைத் தொட்ட கம்பன் தமிழாய்வு மையம்.

2013 ஆம்ஆண்டு நடைபெற்ற கம்பன் தமிழாய்வு மையத்தில் கட்டுரை வாசித்த அந்தமான் அன்பர் அந்தமான் தமிழ்நெஞ்சன் அவர்கள் இவ்வாண்டிற்குள் கம்பன் குறித்த புத்தக்கத்தைவெளியிடும் அளவிற்கு வளர்ந்துள்ளார். அவருக்கு வாழ்த்துக்கள். அவரின் நன்றி பாராட்டிய மடல் இதனுடன்வருகிறது.


அன்புடையீர்...

கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும் என்பார்கள். கம்பன் கழகத்தின்
அரங்கத்தில் காலடி பதித்த நல்ல நேரம், ஒரு நூல் வெளியிட உதவியுள்ளது.

கம்பன் தொடர்பாக அந்தமானில் வெளிவரும் முதல் நூல் இது. நாளை அந்தமான்
தமிழர் சங்கம் நடத்தும் பொங்கல் விழாவில் நூல் வெளி வர உள்ளது. முனைவர்
சரஸ்வதி இராமநாதன் அவர்கள் முன்னுரை வழங்கி என்னையும் என் எழுத்தினையும்
கௌரவப் படுத்தியுள்ளனர்.

நூலின் பிரதியினை உங்கள் பார்வைக்கு அனுப்பி வைக்கின்றேன். இந்தப் பாமரன்
கம்பனை எப்படி பார்த்துள்ளேன் என்பதினை அறிய வைத்திட.

உங்களின் ஆதரவு ஆசியும் வேண்டிநிற்கும்

அந்தமான் தமிழ் நெஞ்சன்
டி என் கிருஷ்ணமூர்த்தி

No comments:

Post a Comment